தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினர்.
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் பருகலாம் என தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மாவட்ட து.செயலாளர் ஸ்மார்ட் சாகுல் ஹமீது தலைமையில் பொதுமக்கள், வணிகர்கள், ஓட்டுனர்கள் ஆகியோருக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.
இதில் மாவட்ட து.செயலாளர் சேக், நகர செயலாளர் அப்துல் சமது, நகர பொருளாளர் அஷ்ரப், நகர து.செயலாளர் மர்ஜூக், இளைஞர் அணி செயலாளர் ஜபருல் ஹக், நபில் ஆகியோர் கலந்து கொண்டனர்.