Friday, April 19, 2024

அதிராம்பட்டினத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன் SDPIகட்சி போராட்டம்!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம்!*

கொரோனா ஊரடங்கு நடவடிக்கை காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக தமிழகம் அழைத்துவர வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை குறைத்திட வேண்டும். மின் கட்டணங்கள், டோல்கேட் கட்டணங்களை ரத்துசெய்ய வேண்டும். கொரோனா அபாயம் முடியும்வரை பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். மேலும், அனைத்து கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்க வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இன்று (ஜூன்.27) தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியுடன் கோரிக்கை போராட்டம் நடைபெற்றது.

அதிரையில் நடந்த போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர தலைவர் அஹமது அஸ்லம் தலைமை வகித்தார். நகர செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் நகர பொருளாளர் ஷேக் தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதேபோல் மாவட்டத்தின் 5 இடங்களிலும் சமூக இடைவெளியுடன் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாப்புலர் ப்ரெண்ட் நகர தலைவர் ஜாவித் மற்றும் சமூக ஊடக அணி தஞ்சை மாவட்ட தலைவர் முஹம்மது அசாருதீன் ஆகியோர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...