Friday, April 19, 2024

பேராவூரணி அருகே சாலையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மாவடுகுறிச்சி ஊராட்சியில்  சேதமடைந்த மண்சாலையை சீரமைத்து தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேராவூரணியை அடுத்த மாவடுகுறிச்சி ஊராட்சியில் செங்கமங்கலம் செல்லும் வழியில் பிரிவு மண்சாலை உள்ளது.  பல ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ள பகுதிக்கு செல்லும் பாதையில்,  சுமார் 10 அடிக்கு சேதமடைந்த நிலையில் போக்கு வரத்துக்கு பயனற்ற நிலையில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. விவசாயிகள் வயல்களுக்கு இடு பொருள்கள் கொண்டு செல்வதும், விளைவித்த பொருள்களை கொண்டு வருவதும் இந்த பாதையின் வழி யாகத்தான்.  தற்போது கோடை விவசாயம் செய்து உள்ளனர். அறுவடை காலமாக உள்ளதால், அறுவடை இயந்திரங்க ளை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் பலவாறு சிரமப்படுகின்றனர்.

எனவே உடனடியாக இந்த மண்சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து மாவடுகுறிச்சி கிராமத்தை சேர்ந்த சன்னாசி கூறுகையில், “மாவடுகுறிச்சியில் இருந்து செங்கமங்கலம் செல்லும் சாலையில்  விவசாய நிலங்களுக்கு செல்லும்  பழையநகரம்  மண்சாலையில்  மிகப்பெரிய பள்ளம் உள்ளது.  இந்த  பாதையின் வழியாக விவசாயிகள் சென்று வந்து கொண்டிருந்தனர். தற்போது  மண் சாலை சேதமடைந்து மழைநீர் தேங்கி நிற்பதால் நெல் வயல்களில் அறுவடை செய்து கொண்டு வரமுடியாமல் மிகுந்த சிரமமடைகின்றனர். இதுகுறித்து,மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்,  ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய ஆணையர், ஒன்றிய குழு உறுப்பினருக்கு மனு கொடுத்து உள்ளோம். உடனடியாக   நடவடிக்கையும் எடுத்து   மண்பாதையை  சீரமைத்து தர  வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...