கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்றது.
இந்த பொதுத்தேர்வு மார்ச் 24 ஆம் தேதி முடிந்த நிலையில், கொரோனா ஊரடங்கு அறிவிப்பு வெளியிட்டதால் சில மாணவர்களால் கடைசி தேர்வை எழுதமுடியாமல் போனது.
இந்நிலையில் அந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு இல்லை எனவும், அவர்கள் தனித்தேர்வர்களுடன் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.
பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, தற்பொழுது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டது.
எனவே, வருகின்ற ஜூலை 8 தேதி காலை 9.30 மணியளவில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.