Home » மல்லிப்பட்டிணத்தில் ,சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தீர்மானம்

மல்லிப்பட்டிணத்தில் ,சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தீர்மானம்

by admin
0 comment

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் MTK.பஷீர் அகமது தலைமையில் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட பொருளாளார் ஆனந்த் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இறந்த தந்தை,மகன் கொலை சம்பவத்தை கண்டித்தும்,குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்கிட வேண்டும்.பெட்ரோல்,டீசல் உயர்வை கண்டித்தும்,கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.மத்திய,மாநில அரசுகள் மக்களை வஞ்சிக்கும் சட்டங்களை அமல்படுத்துவதை கண்டிப்பதோடு இவற்றிற்கு எதிராக வாழ்வுரிமை கட்சி போராடும் என தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

இறுதியாக அமைப்பு செயலாளர் விளாங்குளம் சிவா நன்றியுரை ஆற்றினார்.இதில் ஒன்றிய செயலாளர் யூனுஸ் மற்றும் கட்சியின் நிவாகிகள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter