Home » முழுஊரடங்கு காரணமாக தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

முழுஊரடங்கு காரணமாக தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

by admin
0 comment

தஞ்சை மாவட்ட மீனவர்கள் முழு ஊரடங்கு காரணமாக இன்று(ஜூலை.4) கடலுக்கு செல்ல வேண்டாம் என தஞ்சை மீன்வளத்துறை அறிவித்து இருக்கிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் ஜூலை மாதத்தில் எல்லா ஞாயிற்று கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழுஊரடங்கு பின்பற்றப்படும் என்று அரசு அறிவித்தது. இந்நிலையில் தஞ்சை மாவட்ட மீனவ கிராமங்களான மல்லிப்பட்டிணம், அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை,சேதுபாவாசத்திரம் பகுதிகளை சேர்ந்த நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க வேண்டாம் என்ற உத்தரவை மாவட்ட மீன்வளத்துறை மீனவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter