தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் இரண்டு சக்கர வாகனத்தை ஏற்றி வைத்து பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருவதை கண்டிக்கும் விதமாக பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தட்டு வண்டியில் இரண்டு சக்கர வாகனங்களை ஏற்றிவைத்து பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக நூதன முறையில் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மகேந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இரண்டு சக்கர வாகனம் ஏற்றி வைக்கப்பட்ட தட்டு வண்டியை சாலையில் ஓட்டிச் சென்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மகேந்திரன், பண்ணவயல் ஊராட்சிமன்றத் தலைவர் ராஜா தம்பி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.