தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் வார இதழை எரித்து காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை இழிவுபடுத்தி பதிவிட்டதாக கூறி மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கமிட்டியினர் சார்பாக தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் அப்துல் ஜப்பார்,பேராவூரணி தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நூருல் அமீன்,ரெங்கசாமி மற்றும் காதர்ஷா ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.