தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 118வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா தலைமை வகித்தார்.மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் அப்துல் ஜப்பார் முன்னிலை வகித்தார்.காமராஜர் பிறந்தநாளையொட்டி அவருடைய ஆட்சியில் நடைபெற்ற திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.இதில் மாவட்ட விவசாய அணி துணை தலைவர் ராமகிருஷ்ணன், பேராவூரணி தொகுதி இளைஞரணி செயலாளர் நூருல் அமீன்,காதர்ஷா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.