தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மின்கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தஞ்சை மாவட்டத்தலைவர் அசன் முகைதீன் குற்றச்சாட்டு.
கொரோனா ஊரடங்கில் மக்கள் முடங்கி இருக்கும் இந்த கடினமான நேரத்தில் மின் கணக்கீடு என்ற பெயரில் சாதாரணமாக வரும் மின் கட்டணத்தை விட அதிகமாக இந்த முறை வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆகவே பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியான சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மின்கட்டண கணக்கீட்டை மீண்டும் கணக்கீடு செய்து அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.