தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே ராஜாமடத்தில் காங்கிரஸ் கட்சியினரால் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை துணைத்தலைவர் நாகூர் கனி அன்னதானம் வழங்கி,நோட்டு,பேனா,புத்தகங்களை வழங்கினார்.இதில் பட்டுக்கோட்டை வட்டார தலைவர் அன்பழகன்,அதிராம்பட்டினம் நகர தலைவர் தமீம் அன்சாரி,வட்டார சிறுபான்மை செயலாளர் அப்துல் அஜீஸ், சிறுபான்மை வட்டார செயலாளர் அப்துல் சுகுது,முகமது அப்துல் காதர் மற்றும் ஜமால் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.