Home » மின் கட்டண உயர்வை கண்டித்து திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

மின் கட்டண உயர்வை கண்டித்து திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

by
0 comment

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. சென்னை அதிக பாதிப்புகளுடன் முதல் இடத்தில் இருந்து வருகிறது. அதையும் தாண்டி வட மாவட்டங்களில் அதன் பாதிப்பு என்பது அதிகமாக இருந்து வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் அதன் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கரோனா பாதிப்பு மற்றும் மின் கட்டண உயர்வு பற்றி விவாதிப்பதற்காக தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. முன்னணித் தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். அதில் மின் கட்டண உயர்வு பற்றி விவாதிக்கப்பட்டது. அரசு தொடர்ந்து மின் கட்டண விவகாரத்தில் அலட்சியம் காட்டுவதால் அதனைக் கண்டித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் வருகின்ற 21ஆம் தேதி மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter