Home » ஒரே நாளில் அடுத்தடுத்து 3 திமுக எம்எல்ஏ-க்களுக்கு கொரோனா உறுதி !

ஒரே நாளில் அடுத்தடுத்து 3 திமுக எம்எல்ஏ-க்களுக்கு கொரோனா உறுதி !

0 comment

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசனுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு சளி காய்ச்சல் அதிகரித்த நிலையில் அவருக்கு நடத்தப்பபட்ட பரிசோதயில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று பிற்பகலில் வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இராணிப்பேட்டை திமுக எம்எல்ஏ காந்திக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இவரும் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருடன் சேர்த்து இன்று ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட செங்குட்டுவன், கார்த்திகேயன் மற்றும் காந்தியை சேர்த்து இதுவரை 16 எம்எல்ஏக்கள் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அமைச்சர் கேபி அன்பழகன், அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்துள்ளனர். முன்னாள் எம்எல்ஏக்கள் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் அண்மையில் உயிரிழந்தார். இவர் தான் முதல் முதலாக கொரோனாவால் உயிரிழந்த எம்எல்ஏ ஆவார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter