தமிழகத்தில் மீனவர்களையும், மீன்பிடி தொழிலையும் பாதுகாக்கக் கோரி AITUC மீனவர் சங்கம் சார்பில் மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று மல்லிப்பட்டினம் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகம் அருகே நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மீன் இனத்தையும், மீனவர்களையும் பாதுகாக்க பாக்ஜலசந்தியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அறிவலையை பயன்படுத்த தடை செய்ய வேண்டும் எனவும், நாளொரு பொழுதும் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலையை மனதில் கொண்டு நாட்டுப் படகிற்கு மானிய விலையில் டீசல் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளவது என்பன கோரிக்கைகைளை மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 30 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.