உலகையே உலுக்கி ஆளும் கொரோனா எனும் உயிர்கொல்லி நோயை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் நோயை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் கடுமையாக போராடி வரும் வேளையில், மனித உடலில் நோய் எத்ரிப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசூரக் குடிநீரை காய்ச்சி குடிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசூரக் குடிநீரை பருகி வருகின்றனர். இந்த கபசூரக் குடிநீரை சமுதாய இயக்கங்கள், அரசியல் கட்சிகள், சமுதாய நலச் சங்கங்கள் என அனைவரும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
இன்று அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அரசு மருத்துவமனை சார்ப்பில் பொதுமக்களுக்கு கபசூரக் குடிநீர் CMP லைன் மெடிக்கல் ,சித்தீக் பள்ளிவாசல், செக்கடி மேடு ஜம்ஜம் ஹோட்டல், ரஹ்மானியா பள்ளிவாசல், புதுப்பள்ளிவாசல், A J பள்ளிவாசல், முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல், கலீபா உமர் பள்ளிவாசல் என 8 இடங்களில் வழங்கப்பட்டது. இந்த கபசூரக் குடிநீர் முகாமில் ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வந்து தங்களது வீடுகளில் உள்ள பாத்திரத்தில் வங்கிச் சென்று பயனடைந்தனர்.