தமிழகம் முழுவதும் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பத்து ரூபா இயக்கத்தின் அதிராம்பட்டினம் ஊடகத் துறை செயலாளராக அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் கா. சாகுல் ஹமீது B.com அவர்கள் பொறுப்பு ஏற்றுள்ளார் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
கடந்து வந்த பாதை சமூக சேவையில் அக்கறை கொண்டிருந்த இவர் 2013ஆம் ஆண்டு தன்னை அதிரை எக்ஸ்பிரஸின் இணைத்துக் கொண்டவர் அதிரை எக்ஸ்பிரஸ் வளர்ச்சிக்கும் மாத இதழ் பத்திரிக்கை உருவாக்குவதற்கும் உறுதுணையாக இருந்தவர் அதன்பின் CBD என்ற ரத்த உதவிசெய்யும் அமைப்பில் இணைந்தார் படிப்படியாக உயர்வு 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுகவில் இளைஞர் அணி அமைப்பாளர் என்ற பதவியும் தேடி வந்தது அதன்பின் சமூகத்தில் மிக முக்கியமான நபராக உயர்ந்தார் டெல்டா மாவட்டங்களை உருக்கிய கஜா புயலின் போது பல ஆயிரம் மக்களின் கண்ணீரைத் துடைத்தார் அவருடைய மதிப்பும் உயர்ந்தது 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன் கட்சியில் இணைத்துக் கொள்ள அழைப்பு வந்தது அதனை மறுத்த இவர் சமூக சேவையின் மீது அக்கறை கொண்டு இருந்தார் 2020 ஆம் ஆண்டு கஜா புயலின் சேவை அதற்காக அரியலூர் லயன்ஸ் சங்கம் சார்பாக கௌரவிக்கப்பட்டது அதன்பின் பத்து ரூபா இயக்கம் என்ற ஊழலுக்கு எதிராக இயக்கத்தின் அதிராம்பட்டினம் ஊடகத் துறை செயலாளராக பதவி கிடைத்துள்ளது.