Friday, March 29, 2024

இன்றைய சிந்தனை துளிகள்!!

Share post:

Date:

- Advertisement -

உதவிக் கரம் நீட்டுவோம்…!

ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வது மனித இயல்பு, ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழும் இயல்பே குடும்ப வாழ்க்கையாக உருவாகியுள்ளது…

இந்த உதவும் மனப்பான்மையானது குடும்ப வாழ்க்கையைக் கடந்து உலக மக்கள் அனைவருக்கும் உரியதாக நிலைத்திருக்க வேண்டும்…

ஒருவருக்கு நாம் செய்யும் உதவியால் அவருக்கு மட்டுமல்ல, நமக்குமே மகிழ்ச்சி கிடைக்கும், மற்றவருக்கு உதவி செய்ததால் வாழ்க்கையில் கெட்டுப் போனவர் என்று எவருமேயில்லை…

இதுதான் இயற்கை நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கும் முக்கியமான பாடம். பெறுவதைவிட, கொடுப்பதே உயர்வான செயல்…!

பிறருக்குத் தொந்தரவு தருவது, சீண்டிப் பார்ப்பதே சிலரின் வேலையாக இருக்கும். அவர்களுக்கு மகிழ்ச்சியின் மகத்துவம் புரிவதில்லை என்றுதான் பொருள்…

ஆனால்!, இன்றைய காலகட்டத்தில் ஒருசிலர் உதவ வேண்டிய நேரத்தில், சிலர் மனிதாபிமானம் இல்லாமல் பணத்தை மட்டுமே பெரிதாக பார்க்கிறார்கள்…

இருந்தாலும், ஒரு சிலர் சகோதரத்துவத்தோடு உதவி செய்பவர்களால்தான் இன்னமும் மனித குலம் உயிரோடு வாழ்கிறது, மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை விட ,வேறு எதிலும் அப்படியொரு மகிழ்ச்சி நமக்கு கிடைக்காது…

இல்லாதவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகள் செய்ய வேண்டும், நம்மை நாடி வந்தவர்களுக்கு எவ்வித மறுப்பும் கூறாமல் உதவிகளைப் புரிய வேண்டும்…

ஆம் நண்பர்களே…!

நம்மை நாடி உதவி கேட்டு வருகிறவர்களுக்கு இயன்ற அளவு உதவி செய்து வாழ்வதுதான் நல்ல வாழ்க்கை…!

அதுதான் உங்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்கும்!, அடுத்தவர் வாழ்விலும் ஒளி ஏற்றி வைக்கும்…!!

இல்லாதவர்களுக்கு உதவி கரம் நீட்டுவோம்…!
அவர்களின் கண்ணீர் துடைப்போம்…!
அனைவரிடமும் அன்பு காட்டுவோம்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...