அதிராம்பட்டினத்தில் ( 3.8.2020 )காலை தக்வா பள்ளி அருகிலும் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு அருகிலும் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…இதில்இதில் அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எச்.சபி அகமது எஸ்.டி.பிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.முகமது புகாரி அதிரை பேரூர் தலைவர் எஸ்.அகமது அஸ்லம் செயலாளர் எஸ்.எம் சாகுல் ஹமீது பொருளாளர் என்.எம் சேக்தாவுது இணைச் செயலாளர் சி.அகமது. செயற்குழு உறுப்பினர் எஸ். ஜர்ஜிஸ் உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து தென்காசி விவசாயி முத்து படுகொலை ராணிப் பேட்டையில் இளம்பெண் மீது நடத்திய தாக்குதல் சாத்தான் குளம் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியவாறு முழக்கமிட்டனர்.