உலக முழுவதும் கொரோனா நோய் தொற்று அதிகரித்துவரும் நிலையில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக இன்று கோட்டாகுடி மற்றும் கார்காவயல் கிராம மக்களுக்கு மனோரா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கார்காவயல் ஊராட்சி மன்றம் சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் மனோரா பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வர் மற்றும் கார்காவயல் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு கபசுர வழங்கப்பட்டது.