தமிழக மீனவர் பேவை மாநில பொதுச்செயலாளர் AK.தாஜூதின் முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் அதில் அவர் குறிப்பபிட்டுள்ளதாகவது,
தஞ்சை மாவட்டத்தில் புதியதாக வாங்கி நாட்டுப்படகுகளுக்கு டீசல் மானியம் வழங்கிட விண்ணப்பித்தும் மானியம் கிடைக்காமல் உள்ளது,இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் ஆகவே உடனடியாக டீசல் மானியம் கிடைக்க உத்தரவிட வேண்டும் என்றும்,ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுகிழமை தொழிலுக்கு சென்று வர முடியவில்லை, இதனால் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் கடலுக்கு செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது ஆகவே ஞாயிற்றுக்கிழமை சென்று வரவும், மீன்களை திங்கள் கிழமை சந்திப்படுத்தி கொள்ள அனுமதி வழங்க வேண்டும்,நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு கிசான் திட்டத்தின் மூலம் கடன் பெறலாம் என்ற உத்தரவிற்கு அனைத்து ஆவணங்களையும் மீன்வளத்துறை மற்றும் வங்கிகளில் வழங்கிய போதும் கடன் உதவி வழங்கப்பட வில்லை, ஆகவே அதனை பெற்று தர உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.