Tuesday, April 23, 2024

அதிரை வலைதளங்களில் பரவும் மருத்துவ உதவி தகவல் FAKE !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் சி.எம்.பி லைனை சேர்ந்த சேக் முஹம்மது என்பவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் இதயத்தில் மூன்று அடைப்பு உள்ளதாக டாக்டர் கூறியதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இரண்டரை லட்சம் வரை செலவாகும் என்றும் வங்கி கணக்குடன் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

இதனை மறுஆய்வு செய்து உண்மை நிலவரத்தை அறிவதற்காக அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் சம்மந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு விசாரித்தார்.

அப்போது, ஷேக் முஹம்மது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது உண்மை என்றும், ஆனால் அவருக்கு அறுவை சிகிச்சை எதுவும் செய்ய மருத்துவர்கள் யாரும் பரிந்துரைக்கவில்லை என்றும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் நம்மிடம் தெரிவித்தார்.

மேலும் பொதுமக்கள் ஷேக் முஹம்மதுவிற்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என கூறிய அவர்கள், இக்காலத்தில் உதவி தேவைப்படும் நபர்களுக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

எனவே மேலே குறிப்பிட்ட நபர் சார்ந்த மருத்துவ உதவி பதிவை யாரும் பகிர வேண்டாம் என இதன்மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...