அதிராம்பட்டினம் சி.எம்.பி லைனை சேர்ந்த சேக் முஹம்மது என்பவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் இதயத்தில் மூன்று அடைப்பு உள்ளதாக டாக்டர் கூறியதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இரண்டரை லட்சம் வரை செலவாகும் என்றும் வங்கி கணக்குடன் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
இதனை மறுஆய்வு செய்து உண்மை நிலவரத்தை அறிவதற்காக அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் சம்மந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு விசாரித்தார்.
அப்போது, ஷேக் முஹம்மது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது உண்மை என்றும், ஆனால் அவருக்கு அறுவை சிகிச்சை எதுவும் செய்ய மருத்துவர்கள் யாரும் பரிந்துரைக்கவில்லை என்றும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் நம்மிடம் தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் ஷேக் முஹம்மதுவிற்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என கூறிய அவர்கள், இக்காலத்தில் உதவி தேவைப்படும் நபர்களுக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
எனவே மேலே குறிப்பிட்ட நபர் சார்ந்த மருத்துவ உதவி பதிவை யாரும் பகிர வேண்டாம் என இதன்மூலம் கேட்டுக்கொள்கிறோம்.