Home » SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக சுதந்திர தின விழா!

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக சுதந்திர தின விழா!

by
0 comment

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று 74 ஆம் ஆண்டு சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

SDPI கட்சியின் அதிரை நகர தலைவர் S.அஹமது அஸ்லம் அவர்கள் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநில செயலாளர் சகோதரி N.ஷஃபியா அவர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் நகர பொருளாளர் சகோதரர் NM.ஷேக் தாவூத் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.SDPI கட்சியின் நகர செயலாளர் S.M. ஷாஹுல் ஹமீது அவர்கள் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியை சகோதரர் M. ஜர்ஜீஸ் அஹமது அவர்கள் தொகுத்து வழங்கினார் மற்றும் இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் நகர நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்து தந்தனர்.

SDPI கட்சியின் ஏரிப்புறக்கரை கிளை சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி :

74 ஆம் ஆண்டு சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

SDPI கட்சியின் அதிரை நகர தலைவர் S.அஹமது அஸ்லம் அவர்கள் தலைமை வகித்தார்

கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் N. முகமது புகாரி அவர்கள் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார் .

SDPI கட்சியின் நகர இணைச் செயலாளர் C.அஹமது .MSC அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிரை நகர தலைவர் ஜாவித் அவர்கள் மற்றும் ஏரிப்புறக்கரை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் N. சுரேஷ் அவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் V.சக்திவேல் அவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் C.முத்துலட்சுமி அவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் பாஸ்கர் அவர்கள் மற்றும் SDPI கட்சியின் நகர கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக ஏரிப்புறக்கரை ஊராட்சியின் கிளைச் செயலாளர் C. முத்துக்குமரன்.BSC அவர்கள் நன்றியுரையாற்றினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter