Home » சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி !

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி !

0 comment

கோட்டை கொத்தளத்தில் திறந்த ஜீப்பில் போலீசாரின் அணு வகுப்பு மரியாதையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொண்டார். 4வது முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்ததில் பெருமை அடைகிறேன் என்றார்.

அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை காலை 8.33 மணிக்கு பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வரவேற்றார்.

பின்னர், தென்னிந்திய பகுதிகளின் தலைமைப் படைத் தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத் தளம் விமானப்படை அதிகாரி, கிழக்கு மண்டல கடலோரக் காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், தமிழக டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் டி.ஜி.பி. சட்டம் – ஒழுங்கு) கே.ஜெயந்த் முரளி ஆகியோரை மரபுப்படி முதல்-அமைச்சருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.

தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். இவ்விழாவில் அமைச்சர்கள், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter