Thursday, March 28, 2024

சென்னையிலிருந்து மீண்டும் இயங்குகிறது சர்வதேச விமானங்கள்!!

Share post:

Date:

- Advertisement -

சென்னை விமான நிலையத்தில் இருந்து நான்கு மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன.

கொரோனா பாதிப்பு காரணமாக நான்கு மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. வந்தே பாரத் திட்டம் மூலம் இயக்கப்பட்ட விமானங்களில் வருவோர் தனிமைப்படுத்தப்படும் அச்சத்தால் கொச்சி போன்ற அண்டை மாநில நகரங்களுக்கு வந்து சாலை வழியாக தமிழகத்திற்கு வந்தனர்.

பெரும்பாலான மத்திய அரசின் திட்டமான வந்தே பாரத் விமானக்கள் பெங்களூர், கொச்சி போன்ற நகரங்களில் இயக்கப்பட்டதால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடியே காணப்பட்டது. தற்போது தமிழக அரசின் தனிமைப்படுத்தும் நாட்கள் தளர்த்தப்பட்டுள்ளன.

COVID19 நெகட்டிவ் மருத்துவச் சான்றுடன் வருவோரை 7 நாட்கள் தனிமைப்படுத்துதலில் வைக்க வேண்டியதில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனைத் தோடர்ந்து சிறிய அளவில் மீண்டும் சர்வதேச விமான சேவைகள் சென்னை விமான நிலையத்தில் தொடங்கும் சூழல் ஏற்ப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு (அமீரகத்திற்கு) சிறிய அளவில் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் பயண திட்டத்தை  வெளியிட்டுள்ளன.

ஆகஸ்ட் 30 தேதி வரை 7 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அடுத்த மாதம் செப்டம்பர் 19 ம் தேதி அமீரகத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளதால் விமானப் போக்குவரத்து சேவைகள் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...