அதிராம்பட்டினம் அடுத்த செங்கப்படுத்தான்காட்டில் பல ஆண்டு காலமாக வசித்து வருபவர் தங்கராசு. மாற்றுத்திறனாளியான இவர், தமிழக அரசு கொடுத்து வரும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை குறித்த விவரம் தெரியாமல் அதனை பெறாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து அறிந்த சமூக ஆர்வலர் பட்டுக்கோட்டை நெப்போலியன் மற்றும் அதிரை அலெக்சாண்டர் ஆகிய இருவரும் தங்கராசுவுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை பெற்று கொடுத்தனர்.