தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே, பள்ளத்தூரில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் பஷீர் அகமது மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், பெரியாரிய இயக்கங்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மாலை அணிவத்து மரியாதை செலுத்தி
இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.இந்நிகழ்வில் யூனுஸ் மற்றும் வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.