Saturday, April 20, 2024

படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது? – தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ் !

Share post:

Date:

- Advertisement -

புதுக்கோட்டையை சேர்ந்த கருப்பையா என்பவர் உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அறந்தாங்கி நகரம் காரைக்குடி நெடுஞ்சாலையில் செக்போஸ்ட் அருகில் புதிதாக மதுபானக்கடை அமைக்க எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், 5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது நிலவரம் என்ன என்று தெரியவில்லை? படிப்படியாக கடைகள் மூடப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும், எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளன?

ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வருமானம் வந்தது என்பது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...