அதிராம்பட்டினம் சின்ன நெசவுக்காரத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் முகமது அவர்களின் மகளும், கடற்கரைத்தெரு மர்ஹும் பாவா முகைதீன் அவர்களின் மருமகளும், பி.ஜபருல்லாகான் அவர்களின் மனைவியும், ஜர்ஜீஸ் அகமது, ஜெஹபர் சாதிக் ஆகியோரின் சிறிய தாயாரும், பைசல் அகமது, தம்பி ராஜா என்கிற அபுபர்னாஸ் ஆகியோரின் தாயாருமாகிய ஜெ.ரஷீதா அம்மாள் வயது 60 அவர்கள் இன்று அதிகாலை கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று பகல் லுஹர் தொழுதவுடன் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.