Thursday, April 18, 2024

10ம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் மார்ச் மாத தொடக்கத்தல் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஒருசில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

இதில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பத்தாம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் இன்று முதல் (அக்.23) பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவர்கள் தங்கள் படித்த பள்ளி மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வுமையம் மூலமும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள், தனித்தேர்வர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும்.

மேலும், தனிநபர் இடைவெளி உள்பட பாதுகாப்பு வழிமுறைகளை அவசியம் பின்பற்றுதல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...