தேசிய மனித உரிமை கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தஞ்சை மாவட்ட ஆலோசனை கூட்டம் மல்லிப்பட்டிணத்தில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில் தேசிய மனித உரிமை கவுன்சில் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ஹசன் முகைதீன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் AHR.அப்துல் ஹமீது,மாவட்ட துணைத்தலைவர் M.அயூப்கான், DR.முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேராசிரியர் பாலமுருகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.பொறியாளர் ராவுத்தர் கனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
NHRCOI தமிழ் மாநில தலைவரும்,தென்னிந்திய பொறுப்பாளருமான டிடிகே.சித்திக்,மதுரை மாவட்ட தலைவர் செல்லப்பாண்டி,கோவை மாவட்ட பொதுச்செயலாளர் ஷாஜகான்,காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாவட்ட சிறுபான்மை துறை துணைத்தலைவர் நாகூர் கனி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டனர்.
இதில் புதியதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. மேலும் அனைவருக்கும் இலவச முககவசம் வழங்கப்பட்டது.பணிகள்,செயல்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதில் மல்லிப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாகிகள்,தமிழக வாழ்வுரிமை கட்சி,நண்பர் குழு,சமுதாய நலமன்றம்,மதிமுக,அமமுக போன்றவற்றின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.