Saturday, April 20, 2024

பேராவூரணி, பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் எஸ்.டி.பி.ஐ போட்டியிட செயற்குழுவில் தீர்மானம்..

Share post:

Date:

- Advertisement -

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அதிராம்பட்டினம் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் என்.முஹம்மது புஹாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாநில செயலாளர் எ.அபூபக்கர் சித்திக் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஜெ.சாகுல் ஹமீது வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில் வரும் சட்டமன்ற பொது தேர்தலில் தேர்தல் பணியாற்ற தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பூத் கமிட்டி அமைப்பது, தீவிர உறுப்பினர் சேர்க்கை, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டத்திற்கு உட்பட்ட பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவது மற்றும் பட்டுக்கோட்டை தொகுதி பொறுப்பாளராக மாவட்ட செயலாளர் முஹம்மது ரஹீஸ், பேராவூரணி பொறுப்பாளராக மாவட்ட செயலாளர் முஹம்மது அஸ்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட மருத்துவ கல்லூரியில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற தீர்மானத்தின் மீதான விசாரணையை நான்கு வாரம் ஒத்தி வைத்த ஆளுநரை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ன தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட வர்த்தகர் அணி ஒருங்கிணைப்பாளராக அதிரை அபுல் ஹசன் அவர்களும், SDTU (தொழிற்சங்கம்) மாவட்ட ஒருங்கிணைப்பாளராக புதுப்பட்டினம் ஒளரங்கசீப் அவர்களும் நியமிக்கபட்டனர்.

கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் எ.டி.சாகுல் ஹமீது, மாவட்ட செயலாளர் முஹம்மது ரஹீஸ், மாவட்ட பொருளாளர் எம்.இத்ரீஸ் கான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஒளரங்கசீப், நகர மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் செயலாளர் எல்.முஹம்மது அஸ்கர் நன்றியுரை நிகழ்த்தினார்

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...