தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் பகுதிகளில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மல்லிப்பட்டிணம் கடைவீதி,தெருபகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து, நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன.
இவை சாலைகளில் நடந்து செல்பவர்களையும், குழந்தைகள் மற்றும் முதியவர்களையும், இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்திச்சென்று தாக்கி வருகின்றன. இதனால் கடும் அவதிக்குள்ளாகி உள்ள அப்பகுதி மக்கள் தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்களின் அச்சத்தை போக்க ஊராட்சி மன்ற நிர்வாகம் வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.