Thursday, March 28, 2024

கொரோனாவிற்கான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார் துபாய் ஆட்சியாளர்..!!

Share post:

Date:

- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கொரோனாவிற்கான தடுப்பூசியினைப் இன்று செலுத்திக்கொண்டார்.

அவர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவிற்கான தடுப்பூசியினைப் பெற்றவாறு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அத்துடன், “அனைவரையும் பாதுகாக்கவும், அனைவரையும் குணமாக்கவும் நாங்கள் கடவுளிடம் கேட்டுக்கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியைப் முதன்முறையாகப் பெற்ற நாடுகளில் ஒரு நாடாக அமீரகம் திகழ்வதற்கு கடுமையாக உழைத்த குழுக்களின் முயற்சிகளை நாங்கள் தாம் பாராட்டுவதாக அதில் குறிப்பிட்டு உள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்காலம் எப்போதும் சிறப்பாகவும் அழகாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ள அவர், கொரோனாவிற்கான தடுப்பூசியினை அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி வீரர்கள், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கொரோனா தடுப்பூசியினை பெற்று வருவதாக பதிந்துள்ளார்.

சீனாவின் சினோபார்ம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி தற்பொழுது மருத்துவ பரிசோதனைகளின் மூன்றாவது மற்றும் இறுதி கட்டத்தில் உள்ளது என தமது ட்வீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...