வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் உள்மாவட்டங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.