Home » கொரோனா: டெல்லியில் மீண்டும் ஊரடங்கு?

கொரோனா: டெல்லியில் மீண்டும் ஊரடங்கு?

by
0 comment

டெல்லியில் மீண்டும் கொரோனா நோய் பரவல் அதிகரித்துள்ளதால் அங்கு ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது என தெரிய வந்துள்ளன.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஏற்கனவே டெல்லியில் வைரஸ் பரவல் அதிகமாக இருந்ததை அடுத்து கட்டுப்படுத்த அரசு திணறி வந்தது. ஆனால் அதன்பிறகு நிலைமை சீரான நிலையில் தற்போது மீண்டும் நோய் பரவுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லி அரசு மினி ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியானது. 

இதனால் மக்கள் கலக்கம் அடைந்தனர். ஆனால் ஊரடறங்கு எதுவும் பிறப்பிக்கப்போவதில்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இருக்கிறது என்றும், மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter