பொதுமக்கள் இன்று முதல் வாரந்தோறும் 4 நாட்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம் என ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை இன்று துவங்கி வாரந்தோறும் 4 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட உள்ளது. அரசு பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாளிகை திறந்து வைக்கப்படும். இதனை காண வருபவர்களிடம் ரூ.50 நுழைவு கட்டணமாகவும், 8 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இலவச அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. மாளிகையை பார்வையிட வருவோர் முன்னதாக
http://v.duta.us/4GxBzAAA
என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வீடு உட்பட ராஷ்டிரபதி பவன் தற்போது 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது