Friday, March 29, 2024

CYCLONE NIVAR : `ECR சாலைக்கு சீல்’ – இருசக்கர வாகனங்கள் செல்லவும் தடை !

Share post:

Date:

- Advertisement -

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல், அதி தீவிரப் புயலாக இன்று இரவு புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால், தமிழகம், புதுவையில் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகம், புதுச்சேரி அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. தாழ்வான இடங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை – புதுச்சேரி இடையிலான கிழக்குக் கடற்கரை சாலை சீல் வைக்கப்பட்டிருக்கிறது. நிவர் புயல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராமங்களில் கடல் அலை கடுமையான சீற்றத்துடன் வீசத் தொடங்கியிருக்கிறது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

கிழக்குக் கடற்கரை சாலை வழியாக வாகனங்கள் செல்லக்கூடாது என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருக்கிறார். இதனால் விழுப்புரம் மாவட்ட எல்லையான கீழ்புத்துப்பட்டு பகுதியிலேயே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படு அய்யனார் கோயில், ஒழிந்தாயாப்பட்டு வழியாக திண்டிவனம் சாலைக்கு மாற்றி விடப்படுகிறது. அதே போல் புதுச்சேரியில் இருந்து கோட்டக்குப்பம் வழியாக வரும் வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை.

இருசக்கர வாகனங்கள் கூட கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்ல கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி கடலோரப் பகுதியில் உள்ளதால் கடல் சீற்றத்தின் காரணமாக பாதிக்கப்படக்கூடும் என்பதை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...