Home » புளியை கரைக்கும் “புரேவி” புயல்!

புளியை கரைக்கும் “புரேவி” புயல்!

by
0 comment

அச்சத்தில் தமிழக மீனவர்கள்!

நிவர் புயலில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு மீண்டு வரும் சூழலில் அடுத்த புயல் குறித்து வானிலை மையம் அறிவித்துள்ளது,பொதுமக்கள் மீனவர்களுக்கு கவலை கொள்ள வைக்கிறது.

தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் சற்று தாமதமாக நேற்று அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தொடர்ந்து புயலாக மாறும் எனகணிக்கப்பட்டுள்ளது.

அதனால் நாளை தமிழகத்தில் அதிகனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று டிசம்பர் 2ஆம் தேதி மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter