வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தம், மேற்கு நோக்கி நகர்ந்து, தற்போது தென்மேற்கு வங்காள விரிகுடாவில் சுமார் 460 கி.மீ தூரத்தில் கன்னியாகுமரிக்கு 860 கி.மீ தூரத்தில் தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் இக்காற்றழுத்தம் சூறாவளி புயலாக மேலும் தீவிரமடைந்து மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. டிசம்பர் 3 ஆம் தேதி காலை மேற்கு நோக்கி, மன்னார் வளைகுடா மற்றும் அதனுடன் இணைந்த குமரிக் கடல் பகுதியை அடைய வாய்ப்புள்ளது. பின்னர் அது மேற்கு – தென்மேற்காக தென்தமிழ்நாடு கடற்கரையை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் ஒரு சில இடங்களில் டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.