Friday, April 19, 2024

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிரையில் சாலை மறியல் – எதிர்க்கட்சிகள் பங்கேற்பு !

Share post:

Date:

- Advertisement -

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 14 நாட்களாக விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் இன்று “பாரத் பந்த்” என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

முழு அடைப்பின் ஒரு அங்கமாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகள் இணைந்து பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எஸ்டிபிஐ, தமுமுக, முஸ்லீம் லீக், மஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்து உள்ளன. சாலை மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...