Saturday, April 20, 2024

கர்நாடகா : பலமாதமாக சம்பளம் வழங்காத ஐபோன் தயாரிக்கும் ஆலையை சூறையாடிய ஊழியர்கள் !

Share post:

Date:

- Advertisement -

தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஐபோன் தயாரிக்கும் விஸ்ட்ரான் நிறுவனம், கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் இயங்கி வருகிறது. சுமார் 3,000 ஊழியர்கள் இந்த செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

இதனால் நேற்று இரவு பணிக்கு வந்த 2000 ஊழியர்கள் பணி முடிந்த இன்று காலை ஊதியம் வழங்க கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவில்லை என்றால் அனைவரையும் பணி நீக்கம் செய்து விடுவோம் என விஸ்ட்ரான் நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.

இதனால் நேற்று இரவு பணிக்கு வந்த 2000 ஊழியர்கள் பணி முடிந்த இன்று காலை ஊதியம் வழங்க கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவில்லை என்றால் அனைவரையும் பணி நீக்கம் செய்து விடுவோம் என விஸ்ட்ரான் நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.

இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோலார் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காதது குறித்து நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு உள்ளனர்.

இபோன் உதிரி பாகம் தயாரிக்கும் இந்த விஸ்ட்ரான் நிறுவனம் தங்களது நிறுவனத்தை பெங்களூரில் விரிவாக்கம் செய்து 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாக அறிவித்து இருந்த நிலையில் தற்போது ஊதிய பிரச்சினை பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...