மன்னார்குடி அருகே உள்ள மேலத்திருபாலக்குடியில் நேற்றும் இன்றும் மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி நடைபெற்றது.
இதில் பல ஊர்களைச் சேர்ந்த அணிகள் பங்குபெற்று விளையாடின. அவ்வகையில் அதிரை ஃப்ரண்ட்ஸ் அணியும் இத்தொடரில் பங்கேற்று விளையாடியது. சிறப்பாக விளையாடிய அதிரை ஃப்ரண்ட்ஸ் அணி இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.
மேலத்திருபாலக்குடி அணியுடன் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுய அதிரை ஃப்ரண்ட்ஸ் அணி, வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.
இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற அதிரை ஃப்ரண்ட்ஸ் அணிக்கு, முதல் பரிசாக ரூ. 10,010 மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.