Thursday, April 18, 2024

குடும்ப பிரச்சனையால் அதிரை வந்த மூதாட்டி காவல் நிலையத்தில் ஒப்படைப்பு !

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை அடுத்த மழவேனிற்காடு ஊராட்சியைச் சேர்ந்தவர் சந்திரா. மூதாட்டியான இவர், செல்போன் மூலம் ஆட்டோ வேண்டும் என அதிரை பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு கூறியுள்ளார். அந்த ஆட்டோ ஓட்டுனரும் மழவேனிற்காடு சென்று அந்த மூதாட்டியை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அதிராம்பட்டினம் வந்துள்ளார்.

வரும் வழியில் ஆட்டோவில் இருந்த மூதாட்டி சந்திரா, ஆட்டோ ஓட்டுனரிடம் தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறியுள்ளார். உடனே அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டுநர், அந்த மூதாட்டியை அழைத்துக்கொண்டு தனது பேருந்து நிலைய ஆட்டோ சங்கத்தில் ஒப்படைத்து நடந்தவற்றை விரிவாக கூறியுள்ளார்.

உடனே பேருந்து நிலைய ஆட்டோ சங்க நிர்வாகிகள், மூதாட்டி வைத்திருந்த கைப்பையை வாங்கி பார்த்தபோது சுமார் அறுபத்தி ஐந்தாயிரம் மதிப்பு ரொக்கம் இருந்தது. இதையடுத்து உடனே மூதாட்டி சந்திராவை, பேருந்து நிலைய ஆட்டோ சங்க நிர்வாகிகள், அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் காவல் நிலையத்தில் இருந்து மழவேனிற்காடு ஊராட்சி மன்றத்தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரும் உடனே அதிராம்பட்டினம் காவல் நிலையம் வந்தடைந்தார். பின்னர் ஊராட்சி மன்றத்தலைவரிடம் மூதாட்டி சந்திராவை காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...