அபுதாபி அய்மான் சங்கம் சார்பில்
அபுதாபி சமூக சேவையாளர்கள் அய்யம்பேட்டை ஜாபர் அலி மற்றும், அதிராம்பட்டினம் முஹம்மது மாலிக் ஆகிய இருவரும் அமீரகப் பணிகளை நிறைவு செய்து தாயகம் திரும்புவதை முன்னிட்டு அபுதாபி ஜைத்தூன் உணவக அரங்கில் (23- 12-2020 புதன் மாலை) வழியனுப்பு விழா நடைபெற்றது.
அய்மான் சங்கத் தலைவர் கீழை முஹம்மது ஜமாலுதீன் தலைமை வகித்தார்.
பொதுச் செயலாளர் அப்துல் ரஹ்மான் ரப்பானி அறிமுக உரையற்றினார்.
அய்மான் பைத்துல்மால் தலைவர் அதிரை சாஹுல் ஹமீது,
அய்மான் துணைத் தலைவர்கள் கீழக்கரை ஷேக் ஃபரீத்,மதுக்கூர் அப்துல்லாஹ் ஆகியோர் அய்மான் சங்கம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.
பொருளாலர் முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, செயளாலர்கள் நிஜாம் மைதீன், ஃபிர்தோஸ் பாஷா, சாதிக் பாஷா ஆகியோர் பொதுவாழ்வில் சமூக சேவை செய்து நாடு திரும்பும் இருவரது சேவைப் பணிகளை நினைவு கூர்ந்தனர்.
கூட்டம் துஆவுடன் நிறைவுபெற்றது.