Thursday, April 18, 2024

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம் !

Share post:

Date:

- Advertisement -

மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக கேரளா சட்டசபையில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் புதிய விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கேரளா சட்டசபை தீர்மானம் வலியுறுத்தி உள்ளது.

மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களால் விவசாயிகளின் வாழ்க்கையே நாசமாகும் என்பதுதான் எதிர்ப்புக்கு காரணமாகும். கார்ப்பரேட் நலன்களை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்டுள்ள விவசாய சட்டங்களை கைவிட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.

இதனை வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களின் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தைத் தொடர்ந்து மத்திய அரசும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை நிராகரித்து அண்மையில் டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது புதிய விவசாய சட்டங்களின் நகல்களை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சட்டசபையிலேயே கிழித்தும் எறிந்தார்.

இதேபாணியில் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கேரளா சட்டசபையை கூட்டுவதற்கு முதல்வர் பினராயி விஜயன் தொடர்ந்து முயற்சித்து வந்தார். ஆனால் கேரள ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வந்தார். இந்த நிலையில் இன்று கேரளா சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் புதிய விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் இந்த தீர்மானம் வலியுறுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...