சோஷியல் டெமாக்ரடிக் ட்ரேட் யூனியன்(SDTU) சார்பில் வியாபாரிகளை ஒருங்கிணைக்கும் பணி தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வணிகர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், தேவைகளை தீர்த்து வைக்கும் பணியை இவ்வமைப்பு செய்து வருவதால் இவ்வமைப்பில் ஏராளமான வணிகர்கள் தங்களை இணைத்து வருகிறார்கள்.
அவ்வகையில் அதிராம்பட்டினத்தில் SDTU ஒருங்கிணைப்பு பணி இன்று நடந்தன. அதன் பேரில் இன்று உறுப்பினராக இணைந்த வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகளை அதன் அதிரை நகர பொறுப்பாளர் அபுல் ஹசன் வழங்கினார்.
இது குறித்து கூறிய அவர், விரைவாக அதிரை நகர நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு முறையாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் இக்கூட்டமைப்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட அழைப்பதாக தெரிவித்தார்.