தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் கடைவீதியில் உள்ள கடைகளில் திருடர்கள் திருடும் சிசிடிவி காட்சிகளில் அம்பலமாகியது.கொள்ளையர்களை காவல்துறை தேடி வருகிறது.
மல்லிப்பட்டிணம் அரசினர் மேல் நிலைப்பள்ளிக்கு எதிரே SRK.அசன் முகைதீன் காம்ப்ளக்ஸ் உள்ளது.இந்த காம்ப்ளக்ஸில் ஹார்டுவேர்ஸ்,மொபைல்,ஸ்டேஷனரி உள்ளிட்ட கடைகள் இயங்கி வந்தன.இந்நிலையில் இன்று அதிகாலையில் கொள்ளையர்கள் ஹார்டுவேர் கடையில் இருந்து 35,000 ரூபாய் பணம், ஒரு லட்சம் மதிப்புள்ள நீர் மூழ்கி மோட்டார்,மின்விசிறி,ஒயர் உள்ளிட்ட பொருட்களையும், ஸ்டேசனரியில் இருந்து பணம் மற்றும் பொருட்களையும் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறைக்கு புகார் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.