46
அதிரை அடுத்த தாமரங்கோட்டையில் உள்ள ஏரி ஒன்றிற்கு அப்பகுதியை சேர்ந்த விஜயகுமார் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் மது அருந்த சென்று உள்ளனர். நீண்டநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் அவர்களை உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது ஏரியில் விஜயகுமார் உயிரிழந்த நிலையில் மிதப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காணாமல் போன மற்றோருவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.