Home » குடியரசு தினத்தை முன்னிட்டு மதுக்கூரில் TNTJ நடத்திய இரத்ததான முகாம் !(படங்கள்)

குடியரசு தினத்தை முன்னிட்டு மதுக்கூரில் TNTJ நடத்திய இரத்ததான முகாம் !(படங்கள்)

0 comment

72 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் 88 இடங்களில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் 37ஆவது இரத்ததானமுகாம் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் கிளையில் இன்று (26/01/2021 ) மாவட்ட தலைவர் ராஜிக் முகம்மது தலைமையில் மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலையில் நடைபெற்றது.

மதுக்கூர் காவல் ஆய்வாளர் கார்திகேயன், மீனாட்சி மருத்துவமனை டாக்டர் முஹம்மது பவாஸ், டாக்டர். சாஹிமா பேகம், சமூக ஆர்வலர் பாலசுப்ரமணியன்ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இம்முகாமில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 64 பேர் இரத்த தானம் செய்தனர்.

தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவர் டாக்டர் வேல்முருகன் தலைமையில் இரத்த வங்கி அலுவலர் கண்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் தானமாக வழங்கப்பட்ட இரத்தங்களை சேகரித்தனர்.

இந்நிகழ்சியை கிளை தலைவர் பசூல் ஹக், செயலாளர் ஆசிப் அலி, பொருளாளர் ஜகபர் சாதிக், துனை தலைவர் ரஹ்மத்துல்லாஹ், மருத்துவரணி முகமது ஃபகத், மாணவரணி பரகத்துல்லாஹ், தொண்டரணி சமீர் அகமது, வர்தகரணி செய்யது அஃப்ரித் மற்றும் அன்சர் Misc அவர்கள் ஏற்பாடுசெய்திருந்தனர்.

இந்த முகாமில் இரத்ததானம் செய்தவர்களுக்கு கிளை தலைவர் பசூல் ஹக் சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter