நாமக்கல் ஷூட்டிங் அகாடமி நடத்திய முதலாம் ஆண்டு மாவட்ட ஷூட்டிங் மற்றும் ஓபன் ஷூட்டிங் போட்டி சேலம் சக்ரா வியூகம் ரீஃபைல் கிளபில் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்று.
இப்போட்டியை சேலம் விஜிலன்ஸ் பிரிவு உதவி ஆணையர் பூபதிராஜன் IPS மற்றும் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் நாகராஜன் IPS ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இப்போட்டியில் அதிரையை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் வஜீர் அலி & தைஷீர் அலி ஆகிய இருவர் பங்கேற்றனர். இப்போட்டியில் வஜீர் அலி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஒரு வெண்கல பதக்கம், நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வென்றார். தைஷீர் அலி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றார்.
போட்டியில் வெற்றிபெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் IPS பதக்கங்களை வழங்கினார். ஏறத்தாழ 350 துப்பாக்கி சுடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கலந்துகொண்டனர்.
இதை தொடர்ந்து அதிரையை சேர்ந்த வீரர்கள் வஜீர் அலி மற்றும் தைஷீர் அலி ஆகியோர் அடுத்த மாதம் சென்னையில் நடக்கவிருக்கும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் பங்கேற்க உள்ளனர்.